தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம் - பதிவின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை
Jan 16 2021 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி, மதுரையில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, 166 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் முகாமினை மதுரையில், முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 3 சுகாதாரப் பணியாளர்கள், 3 மருத்துவ ஊழியர்கள் என, 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதேபோல், சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது.
புதுச்சேரியில் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை, முதலமைச்சர் திரு.நாராயணசாமி தொடங்கிவைத்தார். நாள்தோறும் ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.