காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து : பழைய பைபர் படகுகள் கொழுந்துவிட்டு எரிந்தன
Jan 17 2021 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பழைய பைபர் படகுகள் எரிந்து சேதமடைந்தன.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், புதிய படகுகள் கட்டும் பணிகள் மற்றும் விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணிகள் நடைபெறும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், பழைய பைபர் படகுகள் மற்றும் குப்பைகள் எரிந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறிப்பிட்ட பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற, சென்னை துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.