டாக்டர் சாந்தா மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் - புற்றுநோய் சிகிச்சையில் என்றும் நினைவு கூறப்படுவார் என புகழாரம்
Jan 19 2021 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா மறைவுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட சாந்தா என்றும் நினைவு கூறப்படுவார் என பதவிட்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அடையாறு மருத்துவமனை மருத்துவ சேவையாற்றி வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 2018-ம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு தாம் சென்றதை நினைவு கூறும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரதமர் திரு. மோதி, டாக்டர் சாந்தாவின் மறைவால் வருத்தம் அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.