தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு விசாரணை ஆணையத்தின் முன்பாக நடிகர் ரஜினிகாந்த ஆஜராகவில்லை - சென்னையிலேயே ரஜினியிடம் விசாரணை நடத்த தயார் என ஆணையம் அறிவிப்பு

Jan 19 2021 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓரு நபர் விசாரணை ஆணையம் முன்பு காணொலி மூலம் ஆஜராகத் தயார் என நடிகர் ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தன்னெழுச்சியாக போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது 24-ம் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ள விசாரணை ஆணையம், போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்திற்கு பதிலாக, அவரது வழக்கறிஞர் இளம்பாரதி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜரானார். வீடியோ கான்ஃபரன்சிங் மூலம், விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகத் தயார் என, நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், ஆணையத்தில் வீடியோ கான்பரன்சிங் வசதி இல்லாததால், சென்னையிலேயே விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, விசாரணை ஆணையம் தெரிவித்ததாக, நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00