டாக்டர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
Jan 19 2021 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் சாந்தாவின் உடல், காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுப்பட்டுள்ள அறிக்கையில், உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணரான டாக்டர் சாந்தா உடல் நலக்குறைவால் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றவர் டாக்டர் சாந்தா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த டாக்டர் சாந்தாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் தன்னலமற்ற சேவையை கவுரவிக்கும் விதமாகவும் அவரது இறுதிச் சடங்கு, காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.