திருச்சியில் வீட்டில் இருந்த பெண்களை தாக்கி நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை - போலீசார் விசாரணை
Jan 19 2021 4:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வீட்டில் இருந்த பெண்களை தாக்கி நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருச்சியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், லட்சுமி நாரயணன் நகரில் சிந்துஜா என்பவர் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டில் புகுந்த 2 பேர், சிந்துஜா, அவரது மாமியாரை தாக்கிவிட்டு 15 பவுன் நகை, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் தலையில் காயமடைந்த சிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.