கடனாக பெற்ற தங்க நகையை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் மீது புகார்
Jan 19 2021 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடனாக பெற்ற தங்க நகையை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் திரு. கே.எஸ்.பாபு மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின், லூர்துமேரி தம்பதியிடம் காஞ்சிபுரம் பா.ஜ.க மாவட்ட தலைவர் திரு. K.S.பாபு என்பவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மகன் திருமண செலவிற்காக நான்கு பவுன் தங்க நகையை வாங்கியுள்ளார். தற்போதுவரை நகையை திருப்பி தராத கே.எஸ்.பாபு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சுங்குவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.