மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி புதுக்கோட்டையில் போராட்டம்
Jan 19 2021 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி புதுக்கோட்டையில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் ஆலங்குடியில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசு உடனடியாக வேளான் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.