செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு
Jan 19 2021 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், பெரமனூர் அருந்ததி பாளையம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் தனது மனைவி ஆதிலட்சுமியுடன் நேற்று இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சீனிவாசன், ஆதிலட்சுமி ஆகியோர் நிலை தடுமாறி கீழேவிழுந்ததில் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக படாளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.