ஆளுங்கட்சியினரின் தூண்டுதலில் தண்ணீர் திறக்க மறுக்கும் ஆட்சியர் - குடும்ப அட்டைகளை மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் வீசி போராட்டம்
Jan 20 2021 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம், கொம்பாடி கிராமத்திற்கு தண்ணீர் திறக்கவிடாமல், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
கம்பிக்குடி கால்வாய் திட்டத்தின் கீழ், கொம்பாடி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கீழகண்மாய், மேலகண்மாய், நெடுமதுரை ஆகிய கிளை கால்வாய்கள் வழியாக, குடிநீர் மற்றும் விவசாய தேவைக்களுக்காக தண்ணீர் திறக்கக் கோரி கொம்பாடி கிராமத்தை சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம், பல நாட்களாக மனு அளித்து வந்தனர். ஆனால், ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பெயரில், தங்களது கிராமத்திற்கு தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியர் மறுத்து வருவதாகவும், இதனைக் கண்டித்து, சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாகவும், கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக குடும்ப அட்டைகளை ஆட்சியர் அலுவலகம் முன்பு வீசிச் சென்று, அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.