மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அ.ம.மு.க சார்பில், வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் - வரும் 25-ம் தேதி நடைபெறும் என தலைமைக்கழகம் அறிவிப்பு
Jan 20 2021 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள், வரும் 25-ம் தேதி நடைபெறும் என தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எப்போதும் மறக்க முடியாத தமிழ்நாட்டின் வீர வரலாறாக, தனிச்சிறப்பு வாய்ந்த தமிழ் இனத்தின் சரித்திர பதிவாக, அன்னை தமிழ்மொழியைக் காத்திட, இந்தித் திணிப்பை எதிர்த்து, தங்கள் இன்னுயிரைத் தந்த தியாக தீபங்களாம், மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திடும், வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள், கழக மாணவர் அணி சார்பில், வரும் 25ம் தேதி திங்கட்கிழமையன்று, அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழக அமைப்பு ரீதியான 93 மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தலைமைக்கழக பேச்சாளர்கள், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள் என தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.