சிவகங்கை மாவட்டம் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் காளை வெற்றி
Jan 20 2021 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனின் காளை வெற்றி பெற்றுள்ளது.
சிவகங்கை வடக்கு ஒன்றியம், கட்டாணிபட்டி ஊராட்சியில், தமிழர் திருநாளை முன்னிட்டு, அ.ம.மு.க சார்பில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மொத்தம் 12 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 50க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. 3-வது சுற்றில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனின் காளை வெற்றி பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அ.ம.மு.க தலைமை நிலையச் செயலாளர் திரு. K.K.உமாதேவன், கழக இளைஞரணி செயலாளர் திரு.K.டேவிட் அண்ணாதுரை, கழக அம்மா பேரவை செயலாளர் திரு.S.மாரியப்பன் கென்னடி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் திரு.தேர்போகி பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.