மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வலியுறுத்தல் - நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Jan 20 2021 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2017-2018 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு, 3 ஆண்டுகளாகியும் தற்போது வரை மடிக்கணினி வழங்க வில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.