புதுக்கோட்டை வன்னியன்விடுதி சித்திவிநாயகர் கோவில் 61-ம் ஆண்டு விழா ஜல்லிக்கட்டுப் போட்டி : காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி
Jan 24 2021 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி சித்திவிநாயகர் கோவிலின் 61-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் திருமதி. உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொண்டு, சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர்.
காளையை அடக்க முயன்ற காளையர்கள் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததால், அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.