டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு : நாளை மறுதினம் நாடு முழுவதும் டிராக்டர் பேரணி
Jan 24 2021 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாளை மறுநாள் நாடு முழுவதும் வாகன பேரணி நடைபெறும் என்றும், போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு எந்த முயற்சி எடுத்தாலும் அது தவிடுபொடியாகும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.