அ.தி.மு.க.வில் தொடரும் கோஷ்டி பூசல் - அதிமுக அலுவலகம் முற்றுகை : மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டரை மாற்றக்கோரி தொண்டர்கள் போராட்டம்
Jan 24 2021 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திரு. அலெக்சாண்டரை மாற்றக்கோரி, அக்கட்சி தலைமை அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திரு. அலெக்சாண்டர், அவரது உறவினர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினரிடமும் பணம் பெற்றுக் கொண்டு கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் நியமித்து வருவதாக, அக்கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அலெக்சாண்டரின் கட்சி விரோதப் போக்கைக் கண்டித்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை 300-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த முறைகேட்டில் அமைச்சர் திரு. பாண்டியராஜனுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.