கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு : மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை
Jan 25 2021 6:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மேலும் பூக்களின் உற்பத்தி குறைவு காரணமாக விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதன்படி நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இனிவரும் நாட்களில் தொடர் விசேஷ
நிகழ்ச்சிகள் இருப்பதால் மேலும் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.