சென்னை காவல் ஆணையர் உட்பட 3 பேருக்கு குடியரசு தலைவரின் காவல் பதக்கம் அறிவிப்பு - பணித்திறமையை பாராட்டி கவுரவம்
Jan 25 2021 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வாலுக்கு, குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காவல் பணியில் சிறந்து விளங்குவோருக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சென்னை காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆய்வாளர் மணிகண்ட பிரபு ஆகிய 3 பேருக்கு, குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டி இந்தப் பதக்கம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தை சேர்ந்த 17 காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு இடம் பெற்றுள்ளார்.