மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கடைபிடிப்பு - தியாகிகள் நினைவிடத்தில் அ.ம.மு.க.வினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி

Jan 25 2021 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், கழகத்தினர் பேரணியாக சென்று தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில், மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்‍கப்பட்டது. தமிழ்மொழிக்காக பாடுபட்டு இன்னுயிர் நீத்த தியாக வேங்கைகளான கீழப்பழுர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோருக்கு, வீரவணக்கம் செலுத்தும் வகையில், திருச்சி தென்னூர் அண்ணாநகரில் உள்ள அவர்களது நினைவிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன் தலைமையில், கழகப் பொருளாளர் திரு. ஆர்.மனோகரன், தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. எம். ராஜசேகரன், திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு மாணவரணி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக உழவர்சந்தை திடலிலிருந்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பேரணியாக புறப்பட்டு, பின்னர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையும் வைத்து வீரவணக்கம் செலுத்தியதுடன், மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00