ஸ்மார்ட் சிட்டி சாலைகளில் நடைபாதை அமைக்ககோரிய வழக்கு - தமிழக போக்குவரத்துத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
Jan 25 2021 2:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் சாலைகள் அனைத்திலும் பாதசாரிகளுக்கு நடைபாதை அமைக்கக்கோரிய வழக்கில், தமிழக போக்குவரத்துத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பாதசாரிகளுக்கு சரியாக நடைபாதை அமைக்கப்படாததே அதிகப்படியான விபத்திற்கு காரணமென்றும், தமிழகத்தில் 84 சதவீத சாலைகளில் பாதசாரிகளுக்கு நடைபாதை வசதிகள் செய்யப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, போக்குவரத்துத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.