சின்னம்மா நலம் பெற வேண்டி தொடர் வழிபாடு - செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், வேலூர், சேலம், பெரம்பலூரில் பல்வேறு கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்

Jan 25 2021 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தியாகத்தலைவி சின்னம்மா, பூரண உடல்நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன், சிறப்பாக வாழ வேண்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் புதுபக்கத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளரும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான திரு.M. கோதண்டபாணி, திருப்போரூர் ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் திரு.A. குப்புலட்சுமி, திருப்போரூர் ஒன்றிய செயலாளர் முட்டுக்காடு திரு.A. முனுசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கோவை தெற்கு மாவட்டம் கோட்டூர் பேரூராட்சி செயலாளர் திரு.சிவகுமார் ஏற்பாட்டில் கோட்டூர் குமரன் கட்டத்தில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பேரூராட்சி பொறுப்பாளர்கள் திரு.அழகுபாண்டியன், திருமதி. மகேஸ்வரி, திருமதி. ராகவி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், மீஞ்சூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி முப்பத்தம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.பொன் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஜோலார்பேட்டை அடுத்த புத்து கோவில் கிராமத்தில் ஜோலார்பேட்டை ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தேவிசேகர் தலைமையில் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் திரு.இளங்கோ, மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. சோபனா நடராஜன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி. ஈஸ்வரி உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேட்டூர் குஞ்சாண்டியூர் மாவட்ட அவைத்தலைவர் திரு.ஜெமினி, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் திரு.இளங்கோவன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி. விஜயலட்சுமி, வழக்கறிஞர் லோகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவிலில் கழகம் சார்பில் அபிஷேகம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் திரு.எஸ்.கார்த்திகேயன், வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச்செயலாளர் திரு. குலோத்துங்கன், மாநில மகளிர் அணி துணை தலைவர் திருமதி.மைதிலி கோபிநாத், நகர செயலாளர் திரு.பீமா ரஞ்சித் குமார் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், செந்துறை தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், ஊஞ்சினி ஊராட்சியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் திரு. எஸ்.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்வழிபாட்டில் மாவட்ட பாசறை செயலாளர் திரு.எஸ்.மணிவேலன், செந்துறை ஒன்றிய செயலாளர்கள் திரு. செல்வகுமார், திரு. காரல்மார்க்ஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00