அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தால் உருவானதே அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் - செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் எழுச்சியுரை
Feb 25 2021 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஇஅதிமுக-வை மீட்டுக்கும் நிர்ப்பந்தத்தில் தொடங்கப்பட்டதுதான் அமமுக என்றும், இயக்கத்திற்கு வந்த நெருக்கடிகளை எதிர்த்து தாமும் சின்னம்மாவும் கடுமையாகப் போராடியதாகவும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அமமுக-வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய திரு. டிடிவி தினகரன், அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உருவானதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் எனத் தெரிவித்தார். இந்த இயக்கத்தை நடத்தவிடாமல் கொடுக்கப்பட்ட தொல்லைகளை, தியாகத்தலைவி சின்னம்மாவும், தானும் முறியடித்து, மீண்டும் குக்கர் சின்னத்தைப் பெற்றதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள், வரும் 3ம் தேதிமுதல் 10ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தி.மு.க.வை வீழ்த்தப் போகிற இயக்கம் அ.ம.மு.க.தான் என்று உறுதிபடத் தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.