அனுபவமில்லாத தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரோடு விளையாடக் கூடாது - டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
Feb 25 2021 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களை அழைத்துப் பேசி, தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டுமென, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 14-வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துதல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களை அழைத்து பேசி தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதை விட்டுவிட்டு வெளியிலிருந்து, அனுபவமில்லாத தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரோடு விளையாடக் கூடாது என்றும், எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.