சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலி
Feb 25 2021 7:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இங்கு இன்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறி தரைமட்டமாகின. வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்புப் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. விபத்தில் காயமடைந்த 15 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி நேரிட்ட விபத்தில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.