கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருது விடும் போட்டி - பார்வையாளர்கள் உற்சாகம்
Feb 25 2021 7:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 280 எருதுகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்ட எருதுகள், மக்கள் கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்து சென்றன. கூடியிருந்த மக்கள் எருதுகளை கூச்சலிட்டும், கரவோசை எழுப்பியும் உற்சாகப்படுத்தினார்கள். இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.