பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு
Feb 26 2021 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் இன்றுமுதல், அடுத்த மாதம் 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மே மாதம் நடைபெற இருக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், இன்றுமுதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் அடுத்த மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் சிறப்பு அனுமதி முறையில் அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ஆயிரம் ரூபாய் சிறப்பு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.