ஒசூர்-கர்நாடக எல்லையில் சுகாதார துறையினர் தீவிர சோதனை : பயணிகளிடம் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் உள்ளதா என ஆய்வு
Feb 26 2021 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்-கர்நாடக மாநில எல்லையில் சுகாதார துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் ஆய்வில் ஈடுபட்டுள்ள தமிழக சுகாதார துறையினர், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவதுடன், அவர்களிடம் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் உள்ளதா என்றும் ஆய்வு செய்கின்றனர். பரிசோதனை சான்றிதழ் இல்லாதவர்கள், அத்திப்பள்ளி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்துப்பட்டு, முகவரி உட்பட முழு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. கேரளா, மகாராஷ்டிரா வாகனங்களை தவிர்த்து, மற்ற வாகனங்கள் மாநிலத்திற்குள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றன.