தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் மூடல் : இட ஒதுக்கீடு, சட்ட பாதுகாப்பு கேட்டு போராட்டம்
Feb 26 2021 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முடிதிருத்தும் தொழிலாளர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு, சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் இன்று சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தங்கள் சமூகத்திற்கு சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.