புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் அரியர் தேர்வுக் கட்டணத்தை திரும்ப தர வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியல்
Feb 26 2021 2:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வுக் கட்டணத்தை திரும்ப தர வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் ஏற்கனவே அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்த நிலையில் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. தற்போது அரியர் தேர்வு எழுதுவதற்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.