கன்னியாகுமரியில் 80 ஆண்டுகளாக மின் வசதி இல்லாமல் வாழும் குடும்பம் - மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் படித்து பட்டதாரியான பெண்கள்
Feb 26 2021 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் மருதூர்குறிச்சி அருகே, 80 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி வாழ்ந்து வரும் மூதாட்டி ஒருவர் தனது பேரக் குழந்தைகளை மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கியுள்ளார்.
மருதூர்குறிச்சி அருகே, வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்குட்பட்ட பண்டாரவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி தங்கம்மாள். 80 ஆண்டுகளாக, மின்சார வசதி இல்லாமல் வாழ்ந்து வரும் இவர், மின்சார வசதி கேட்டு, பல முறை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனைத் தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் படித்தே தனது பேரக் குழந்தைகள் பட்டதாரி ஆகியுள்ளனர் எனவும் மூதாட்டி தங்கம்மாள் பெருமிதம் தெரிவித்துள்ளார். சாலைக்கும், மூதாட்டி தங்கம்மாள் வீட்டிற்கும் இடையே உள்ள தொலைவை காரணம் காட்டி, மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.