கன்னியாகுமரியில் ரப்பர் பால் வெட்டும் தொழில் 2 மாதங்களுக்கு முடக்கம் - இலையுதிர் காலத்தில் நிவாரண உதவி வழங்க ரப்பர் விவசாயிகள் கோரிக்கை
Feb 26 2021 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலையுதிர் காலம் தொடங்கி ரப்பல் பால் வெட்டும் தொழில் முடங்கியுள்ளதால், ரப்பர் விவசாயிகள் தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பண பயிர்களில் ஒன்றான ரப்பர் விவசாயம் திருவட்டார், கல்குளம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய நான்கு தாலுக்காகளுக்கு உட்பட்ட மலையும், மலையை சார்ந்த நிலங்களில் சுமார் 30 ஹெக்கேடரில் நடைபெற்று வருகிறது. ரப்பர் மரங்களில் இருந்து ரப்பர் பால் வெட்டி எடுத்தல், பால் பதப்படுத்துதல், ராப்பர் சீட்டுகளாக தயார் செய்தல், பின்னர் உலர வைத்தால் உள்ளிட்ட பணிகளில் நேரிடையாகவும், மறைமுகமகவும், இரண்டு லட்சம் தொழிளார்கள் தினசரி பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் பிப்ரவரி மாதம் இறுதி முதல் இரண்டு மாதங்கள் ரப்பர் மரங்களுக்கு இலையுதிர் காலம் தொடங்குவதால் இந்த தொழில் முடங்கியுள்ளது. எனவே மீன்பிடி தடைக்காலத்தில் இரண்டு மாதங்கள் நிவாரண உதவி வழங்குவதைபோன்று ரப்பர் தோட்ட தொளிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.