தமிழகத்தில் விறுவிறுப்படையும் தேர்தல் களம் : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
Mar 1 2021 10:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி நடாளுமன்ற இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் அறிவிப்பை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை வேகம் பெற்றுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், வாகன சோதனை, தேர்தல் விதிமீறல்கள் கண்காணிப்பு எனத் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் இந்தக்கூட்டத்தில், தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள், நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.