திருச்சி மந்த கதியில் அமைக்கப்படும் பாதாளசாக்கடை பணிகள் - இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி
Mar 1 2021 10:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் தற்போது தான் பாதாளசாக்கடை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆட்சியர் அலுவலக பிரதானசாலையில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டது. பாதாள சாக்கடை உடைப்பிலிருந்து சாக்கடைநீர் பீறிட்டி வெளியேறியதுடன் சாலையில் குளம்போல தேங்கியதுடன், தொடர்ந்து சாக்கடைநீர் வெளியேறிய வண்ணம் இருந்தது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக சாக்கடைநீர் வெளியேறி சாலையோர வடிகால்வழியே தண்ணீர் சென்றது. இதனால் ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மற்றும் பாதசாரிகளாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.