கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் பத்திரப் பதிவுக்கு தடை - 14 ஊராட்சிகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ளக் கூடாது என உத்தரவு
Mar 1 2021 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் கதிர்வீச்சு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்ட 14 கிராமங்களில் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையம் சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய அரசின் அணு ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அணுமின் கழக நிர்வாகத்தின் கீழ் கல்பாக்கம் அணு உலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, அவசர நிலை பிரகடனத்தின் போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதால், புதிதாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் இனிமேல் நிலம் பத்திரப் பதிவு செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள சதுரங்கப்பட்டினம் மற்றும் கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமை பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம் உள்பட 14 ஊராட்சிகளில் இனிமேல் பத்திரப்பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3Fq3YjPbuq4