தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பு - எஸ்.பி அலுவலகம் முற்றுகை
Mar 1 2021 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்தோப்பு கிராமத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இருந்தும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த கிராமத்தில் கிராம மக்கள் காவல்துறையினர் இணைந்து கிராமம் முழுவதும் 35 சி.சி.டி.வி கேமராக்களை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொருத்தியுள்ளனர். இருப்பினும் அந்தப் பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.