சிதம்பரத்தில், அனுமதியின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த 97 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
Mar 6 2021 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், அனுமதியின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த 97 கிலோ வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் புறவழி சாலையில், செந்தில் என்பவருக்கு சொந்தமான வெடி மருந்து குடோன் மற்றும் பட்டாசு கடை உள்ளது. அந்த பகுதியேயே அவரது வீடும் அமைந்துள்ளது. இந்நிலையில், அனுமதியின்றி செந்தில் தனது வீட்டில் வெடி மருந்துகளை வைத்திருப்பதாக, போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், போலீஸ் டிஎஸ்பி லாமேக், பறக்கும் படை தாசில்தார் சத்தியன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் சுமார் 40 கிலோ சல்பர், 7 கிலோ அலுமினிய பவுடர், 50 கிலோ கரி உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், வெடி மருந்து குடோனிலும் ஆய்வு நடத்தி, 97 கிலோ வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பறக்கும் படை தாசில்தார் சத்யன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.