தி.மு.க ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டி
Mar 6 2021 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தி.மு.க ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு.கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தி.மு.க. 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு.சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு.பாலகிருஷ்ணன், தி.மு.க ஒதுக்கிய இடங்களை ஏற்க முடியாததால் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.