பாலியல் புகாரில் சிக்கிய டிஜிபி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்
Mar 6 2021 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் புகாரில் சிக்கிய காவல்துறையின் உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாதர் சங்கம் சார்பாக புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முகப்பு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறையில் பணிபுரியும் பெண் உயரதிகாரிகளுக்கு இதுபோன்ற பாலியல் தொல்லை கொடுக்கும் அதிகாரிகள் மீது சாதாரண நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமற்ற செயல் என்றும், ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.