கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்
Mar 6 2021 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதல் அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த ஜனவரி 21-ம் தேதி முதல், வருடாந்தர பராமரிப்புக்காக இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு உலைகளையும் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தி நிறுத்தத்தால், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு கிடைக்கும் சுமார் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.