விவசாயிகளை இழிவுபடுத்திய பாஜக பிரமுகரை கண்டித்து திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Mar 6 2021 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தும் வகையில் நாளிதழில் கட்டுரை எழுதிய, பாஜக பிரமுகர் திரு.கே.பி. ராமலிங்கத்தை கண்டித்து திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில், விவசாயிகளை கொச்சைப்படுத்தும் வகையில் இருந்த, கட்டுரையின் நகரை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.