பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வீட்டுமனைத் திட்டத்திற்கு வாங்கிய நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
Mar 6 2021 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வீட்டுமனைத் திட்டத்திற்கு வாங்கிய நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தொலைத்தொடர்பு ஊழியர்கள், கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான, திருவள்ளூர் வெள்ளனூரில் உள்ள சுமார் 15 ஏக்கர் நிலத்தை கடந்த 2017ம் ஆண்டு, சங்கத்தின் செயலாளர் பிரபாகரன் என்பவர் விற்பனை செய்ததாக, அச்சங்கத்தின் உறுப்பினர் என்.பாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தொலைத்தொடர்பு ஊழியர்கள், கூட்டுறவு சங்கத்தின் நிலத்தை பிற நபருக்கு பத்திரப்பதிவு செய்வதற்கும், சங்க நடவடிக்கைகளில் முந்தைய நிர்வாகிகள் தலையிடுவதற்கும் தடை விதித்து, வழக்கை மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.