திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்
Mar 6 2021 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம், வையம்பட்டி வனப்பகுதியிலிருந்து திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற காட்டெருமை ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினர் மூலம் உடல் மீட்கப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டது. அண்மை காலமாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் வனத்திலுள்ள விலங்குகள் உணவு மற்றும் இரை தேடி வெளியே வந்து விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக கூறப்படுகிறது.