பெரம்பலூர் அருகே, அனுமதியின்றி போடப்பட்ட மின்வேலியில் சிக்கிய மான்கள் - தீ வைத்து எரித்த இருவரை கைது செய்தது வனத்துறை
Mar 7 2021 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் அருகே, விவசாய நிலத்தில் அனுமதியின்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கிய மான்களை தீ வைத்து எரித்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், ராஜமாணிக்கம் ஆகியோர், தங்கள் விளைநிலங்களில் அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளனர். பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் நேற்றிரவு 2 மான்கள் சிக்கி உயிரிழந்துள்ளன. காலையில், மான்கள் இறந்து கிடந்ததை கண்ட விவசாயிகள் இருவரும், அவற்றை அப்புறப்படுத்தி உள்ளனர். அப்போது, இறந்த பெண் மானின் வயிற்றில் இருந்து குட்டி வெளியே வந்துள்ளது. உயிரிழந்து கிடந்த 2 மான்களுடன் குட்டியையும் சேர்த்து, வயலுக்கு அருகே இருவரும் எரித்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வழியாக சென்ற சிலர், 3 மான்கள் எரிந்த நிலையில் இருந்ததை கண்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேரில் சென்ற வனத்துறையினர், பன்னீர்செல்வம் மற்றும் ராஜமாணிக்கம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.