தென்தமிழக மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Mar 7 2021 11:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்தமிழக மாவட்டங்களில் வரும் 8ம் தேதிமுதல் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 10ம் தேதி வரை, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.