கொரோனா தாக்‍கம் மீண்டும் உருவெடுத்துள்ளதால் சென்னை உயர்நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு - உயர்நீதிமன்றத்திற்குள் மத்திய-மாநில அரசு வழக்‍கறிஞர்கள் தவிர மற்ற வழக்‍கறிஞர்களுக்‍கு அனுமதியில்லை என அறிவிப்பு

Mar 7 2021 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தாக்‍கம் மீண்டும் உருவெடுத்துள்ளதால் சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் மத்திய-மாநில அரசு வழக்‍கறிஞர்கள் தவிர மற்ற வழக்‍கறிஞர்களுக்‍கு அனுமதியில்லை என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர் அலுவல் அறைகள் கடந்த 300 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தன. மத்திய, மாநில அரசுகள், ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் உருவெடுத்துள்ளதால், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் நேரடியாகவும், மற்ற வழக்கறிஞர்கள் காணொலி மூலமாகவும் மட்டும் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாளை முதல், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர வேறு எவருக்கும் அனுமதியில்லை எனவும், வழக்கறிஞர் அறைகள் மூடப்படும் எனவும் தலைமைப் பதிவாளர் குமரப்பன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00