கொரோனா தொற்று சரித்திரத்தில் ஒரு ஆண்டை விடுபட செய்துவிட்டது : கவிஞர் வைரமுத்து கவலை
Apr 21 2021 10:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்று, சரித்திரத்தில் ஒரு ஆண்டை விடுபட செய்துவிட்டதாக திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திரு.வைரமுத்து, கொரோனா தொற்றால் எத்தனை அறிவியல் அறிஞர்கள், இந்த சமூகத்தை விட்டு ஒதுங்கி உள்ளார்கள் என்பது நமக்கு தெரியாது என வேதனை தெரிவித்தார். உலகில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், கொரோனா தொற்றால் கொள்ளையடிக்கப்பட்ட காலத்தை மீட்டு கொடுப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார். மனதளவில் மிருக தோலுடன் இருக்கும் மனிதர்களை மாற்றுவது கல்வி தான் என்றும், கவிஞர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்தார்.