பகல் நேர சிறப்பு பேருந்துகள் இன்று இரண்டாவது நாளாக இயக்கம் - பகல் பயணத்தில் ஆர்வம் காட்டாத மக்கள்
Apr 21 2021 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கு காரணமாக பகல் நேரத்தில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இல்லாததால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வெளிமாவட்ட பேருந்துகள் காலை முதல் மாலை வரை மட்டுமே இயக்கப்பட்டன. தூரம், பயண நேரத்தை கணக்கிட்டு தேவையான அளவு பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கின. குறைந்த அளவிலேயே ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று பயணிகளின் வரத்து குறைந்துள்ளதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பகல் நேர பயணத்தை தவிர்ப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.