நாமக்கல் மாவட்டத்தில் மயானத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு
Apr 21 2021 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மயானத்தில், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சி சார்பில் 21 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தரம் பிரிக்கப்படாமல் மயானத்தில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. குப்பைகளுடன் மருத்துவ கழிவுகளையும் சேர்த்து கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால், மயானத்தில் இறுதிச்சடங்குகளை கூட உரிய முறையில் செய்ய முடிவதில்லை என, பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.