ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிதாக அமைக்கப்பட்ட படகு தளம் சேதம்
Apr 21 2021 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிதாக அமைக்கப்பட்ட படகு தளம், தரமற்ற கட்டுமான பணிகளால் சேதமடைந்து வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மூக்கையூரில் கடந்த ஆண்டு, 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. திறப்பு விழா கண்டு ஓராண்டு மட்டுமே கடந்துள்ள நிலையில், படகுகள் நிறுத்தும் தளம், மீன் ஏல கூடம் ஆகிய இடங்களில் கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகள்,
கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்து சேதமடைந்து வருவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தரமற்ற கட்டுமான பணிகளால் இவ்வாறு சேதமடைந்து வருவதாகவும், எனவே ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.