தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை - கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இருக்கைகள் அமைக்க நடவடிக்கை
Apr 21 2021 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் காரணமாக, வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மே 2-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுடன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு, காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வாக்கு எண்ணிக்கையின்போது, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக மேசைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.